Published : 19 May 2017 06:01 PM
Last Updated : 19 May 2017 06:01 PM
நாடு முழுவதும் 10 அணு உலைகள் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள முடிவு குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஷிப்பூரில் உள்ள இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்த கொண்ட குடியரசு தலைவர், நாட்டிலேயே முதன்முறையாக சூரிய ஒளி – இயற்கை எரிவாயு – காற்று ஆகியவற்றை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்திலான மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்,
“நாடு முழுவதும் 10 அணு உலைகள் திறப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அணு உலைகள் தலா 700 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவையாக செயல்பட உள்ளன.
நாடு முழுவதும் இன்னமும் 30 கோடி மக்கள் மின்சார வசதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சாமானிய மக்களுக்கும் மின்சாரம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை நாம் விரைந்து செயல்படுத்தி ஆக வேண்டும். இது போன்ற செயல்பாடுகளுக்கு இயற்கைக்கு கேடு விளைவிக்காத அணு உலை திட்டங்களை செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT