போலி முகாம் நடத்தி ராணுவத்துக்கு ஆள் சேர்த்த 4 பேர் கைது

போலி முகாம் நடத்தி ராணுவத்துக்கு ஆள் சேர்த்த 4 பேர் கைது
Updated on
1 min read

ராஜஸ்தானில் சிலர் ராணுவத்துக்கு போலியாக ஆள் சேர்ப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப்படையினரும் ராணுவ உளவுப் பிரிவினரும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக 4 பேரை ஜெய்ப்பூரில் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது, ஜெய்ப்பூரில் உள்ள சிறப்பு செயல்பாட்டுக் குழு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in