Published : 26 May 2017 10:40 AM
Last Updated : 26 May 2017 10:40 AM
மத்தியபிரதேச மாநிலம் மன்ட்சோர் மாவட்டத்தில் உள்ள கந்தேரியாகச்ரியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், டிராக்டரில் கோயிலுக்குச் சென்றனர். ராஜஸ்தான் மாநிலம் அருகே உள்ள அந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கான்கபட்டா கிராமத்தில் ஒரு வளைவில் திரும்பும்போது, நிலைதடுமாறி டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிராக்டருக்கு அடியில் பலர் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 6 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், டிராக்டருக்கு அடியில் சிக்கியதில் படுகாயமடைந்த 22 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள னர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT