Published : 09 May 2017 09:21 AM
Last Updated : 09 May 2017 09:21 AM

ஜம்மு-காஷ்மீரில் 200 தீவிரவாதிகள் பதுங்கல்

ஜம்மு-காஷ்மீரில் சுமார் 200 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்று அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில காவல்துறை ஐஜிபி கிலானி நிருபர்களிடம் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 95 இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர். அவர்களையும் சேர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 200 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களில் 110 பேர் காஷ்மீர் இளைஞர்கள். மற்றவர்கள் வெளிநாட்டினர்.

கல்வீச்சு சம்பவங்களைத் தடுக்க சமூக வலைதளங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறை குறைந்தவுடன் அந்த தடை நீக்கப்படும். மேலும் தீவிரவாதத்தை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின்பேரில் 22 இணையதளங்கள் முடக்கப் பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x