Published : 03 Feb 2023 10:17 AM
Last Updated : 03 Feb 2023 10:17 AM

ராமர் மற்றும் ஜானகி சிலைகளை உருவாக்க நேபாளத்தில் இருந்து புனித கற்கள் அயோத்தி வந்தடைந்தன

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இங்கு வைக்கப் படும் ராமர் மற்றும் ஜானகி சிலைகளை உருவாக்க, சீதை பிறந்த இடமான நேபாளத்தின் ஜானக்பூரில் இருந்து சாலிகிராம் என அழைக்கப்படும் 2 புனித கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு கல் 18 டன் எடையிலும், மற்றொரு கல் 16 டன் எடையிலும் உள்ளன.

நேபாளத்தின் ஜானக்பூரில் உள்ள காலி கந்தகி ஆற்றங் கரையில் இந்த சாலிகிராம் கற்கள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து 2 புனித கற்களை, இங்குள்ள ஜானகி கோயில் நிர்வாகம் அயோத்திக்கு அனுப்பியுள்ளது. நேபாள பிரதிநிதிகள் குழு நேற்று இந்த கற்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. அயோத்தியில் புனித கற்களுக்கு ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகத்தினர் நேற்று சிறப்பு பூஜை செய்தனர். இதில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x