Published : 03 Feb 2023 04:58 AM
Last Updated : 03 Feb 2023 04:58 AM

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக மாறிய ஆசிரியர் கைது

ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவுகளுக்கு ஏற்ப ஆரிப் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த மே மாதம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்தில் குண்டுவெடித்ததில் 4 பேர் இறந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர். இதுபோன்ற பல்வேறு தாக்குதல்களில் தனது பங்கு இருப்பதாக ஆரிப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆரிப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு தில்பாக் சிங் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x