திருமலையில் தடையை மீறி பிளாஸ்டிக் கவர்கள் புழக்கம்

திருமலையில் தடையை மீறி பிளாஸ்டிக் கவர்கள் புழக்கம்
Updated on
1 min read

திருமலை: திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முற்றிலுமாக தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் லட்டு கவர்களுக்கு பதிலாக விலை அதிக முள்ள சணல் பைகளையும், ரூ.3, 6 விலையுள்ள மக்கும் கவர்களையும் பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறது. இதனால் லட்டு விலையையும் ஏற்றிவிட்டு, கவர் விலையையும் தேவஸ்தானம் ஏற்றியுள்ளதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில் அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் பாப்கார்ன், சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் வெளியில் இருந்து ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.

அலிபிரி சோதனைச் சாவடியைகடந்து இவை எப்படி திருமலைக்கு வருகின்றன? இதனை தேவஸ்தான அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள பக்தர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in