Published : 02 Feb 2023 05:44 AM
Last Updated : 02 Feb 2023 05:44 AM

முழுமையாக அறியாமல் பேசக்கூடாது - காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த அம்சங்கள் எதுவும் இல்லை. பட்ஜெட்டை பொருத்தவரையில் அதுகுறித்து விவரிக்க பொருளாதாரம் நன்கு அறிந்த ஏராளமான தலைவர்கள் கட்சியில் உள்ளனர். முதலில் அவர்கள்தான் பட்ஜெட் குறித்து விளக்கி கூற வேண்டும். அதன் பின்னர்தான் நான் பேசவேண்டும். பட்ஜெட் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுவது பொருத்தமாக இருக்காது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணவீக்கம், வேலையின்மை, சீனாவுடனான எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x