தெரு நாய் கடித்து குழந்தைகள் உட்பட 80 பேர் பாதிப்பு

தெரு நாய் கடித்து குழந்தைகள் உட்பட 80 பேர் பாதிப்பு
Updated on
1 min read

போஜ்பூர்: பிஹாரின் அராஹ் நகரில் மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் தெருநாய் கடித்த காயங்களுடன் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இவர்கள் அனைவரையும் ஒரே நாய் கடித்து குதறியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த நாயை பிடிக்க குழு ஒன்றை அனுப்பினர். அதற்குள் அப்பகுதி மக்களே நாயை அடித்துக் கொன்று விட்டனர்.

மருத்துவமனை மேலாளர் கவுஷல் துபே கூறும் போது, “காயங்களுடன் மருத்துவ மனைக்கு வந்த 86 பேருக்கு சிகிச்சை அளித்து, ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குடியரசு தின விடுமுறையாக இருந்தபோதும் மாவட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in