Published : 26 Jan 2023 10:23 PM
Last Updated : 26 Jan 2023 10:23 PM

சூரத் | கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர்

கோப்புப்படம்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள கார் ஷோரூம் ஒன்றில் அதிபயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரத் நகரில் உள்ள உத்னா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மிகத் தீவிரமாக இருப்பதை பார்க்க இது குறித்த வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த விபத்து குறித்து செய்தி முகமை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் சிக்கி யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. அதே போல பாதிப்பு குறித்த விவரமும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x