Published : 06 Dec 2016 07:04 AM
Last Updated : 06 Dec 2016 07:04 AM
ஜம்மு அருகே நக்ரோட்டா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அந்த முகாமின் பின்பக்கம் உள்ள வனப் பகுதி வழியே உள்ளே நுழைந்ததாக தெரியவந்துள்ளது.
கடந்த 29-ம் தேதி, போலீஸ் உடையில் வந்த 3 தீவிரவாதிகள் நக்ரோட்டா ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இவர்களுக்கு எதிராக ராணுவ வீரர்கள் சுமார் 8 மணி நேரம் சண்டையிட்டனர். இதில் 3 தீவிர வாதிகளும் கொல்லப்பட்டனர். ராணுவத் தரப்பில் 2 அதிகாரிகள் உட்பட 7 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “முகா மில் ராணுவ வீரர்கள் மீது கையெறி குண்டை வீசி தீவிரவாதிகள் உள்ளே நுழைந்தனர்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ராணுவ முகாமின் பின்பக்கம் உள்ள வனப்பகுதி வழியாக தீவிரவாதிகள் உள்ளே நுழைந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதியில் சிறிய சுவரும் முள்வேலியும் உள்ளன. இந்தப் பகுதி வழியாகவே தீவிரவாதிகள் ஊடுருவியதாக இத்தகவல் தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT