Published : 20 Jan 2023 05:39 AM
Last Updated : 20 Jan 2023 05:39 AM

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் வேன் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மும்பை- கோவா நெடுஞ்சாலையில் வேன் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் ஹெத்வி கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஒரு வேனில் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். ராய்காய் மாவட்டத்தில் உள்ள மும்பை -கோவா நெடுஞ்சாலையில் அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி வேன் மீது மோதியது. இதில் சிறுவன், சிறுமி, 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. லாரி டிரைவரை கைது செய்த போலீஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x