Published : 15 Jan 2023 06:02 AM
Last Updated : 15 Jan 2023 06:02 AM

ஒடிசா கோயிலில் நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

கட்டாக்: ஒடிசாவின் கட்டாக் மாவட்டம், பதம்மா அருகே மகாநதியோரம் சிங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இது ஒடிசாவின் புகழ்பெற்ற ஆன்மிக தலமாகும். மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த கோயிலில் நேற்று மகர மேளா தொடங்கியது. இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

அப்போது அங்குள்ள பதம்பா-கோபிநாத்பூரை இணைக்கும் பாலத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். குழந்தைகள், பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட் டுள்ளனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x