Last Updated : 12 Dec, 2016 10:22 AM

 

Published : 12 Dec 2016 10:22 AM
Last Updated : 12 Dec 2016 10:22 AM

மக்கள் கைவிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தில் எந்த அலுவலும் நடைபெறவில்லை: செல்போன் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தேர்தலின்போது மக்களால் புறக் கணிக்கப்பட்டவர்கள் நாடாளு மன்றத்தை நடத்தவிடாமல் அமளி யில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந் நிலையில், அம்மாநிலத்தின் பரைக் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசுவதாக இருந்தது.

இதற்காக மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் லக்னோ திரும்பியது. பின்னர் லக்னோவி லிருந்து செல்போன் மூலம் மோடி பேசியதாவது:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், மக்களால் புறக் கணிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர், விவாதம் நடத்த அனுமதிக்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 20 நாட்களாக நாடாளுமன்றம் எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கி உள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் ஏழை மக்களுக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்று அரசு விரும்பு கிறது. இதற்காக, கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சிரமத்தை தாங்கிக்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள்.

இங்கு ஆட்சியில் இருந்த, ஆட்சியில் உள்ள இரு கட்சிகளும் அரசின் நடவடிக்கையை கடுமை யாக எதிர்க்கின்றன. ஏனெனில் அவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற் பட்டுள்ளது.

எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். பாஜக வெற்றி பெற் றால், மக்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x