Published : 19 Dec 2016 04:14 PM
Last Updated : 19 Dec 2016 04:14 PM

கேரள சிபிஎம் தொண்டர் கொலை வழக்கு: ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த 11 பேருக்கு இரட்டை ஆயுள்

2008-ம் ஆண்டு கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி.விஷ்ணு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 11 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்ட கேரள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற அரசுதரப்பு கோரிக்கையை நீதிபதி டி.கே.மினிமோல் நிராகரித்தார்.

இரட்டை ஆயுள் தண்டனையோடு கொல்லப்பட்ட விஷ்ணுவின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 15-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு இவருக்கு அடைக்கலம் கொடுத்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x