Last Updated : 14 Dec, 2016 09:12 AM

 

Published : 14 Dec 2016 09:12 AM
Last Updated : 14 Dec 2016 09:12 AM

பண மதிப்பு நீக்கத்தைக் கண்டித்து கேரளாவில் இடதுசாரிகள் 29-ல் மனித சங்கிலி போராட்டம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து கேரளாவில் வரும் 29-ம் தேதி ஆளும் இடதுசாரி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங் கிணைப்பாளர் வைக்கம் விஸ்வான் கூறியதாவது:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே, மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாக வரும் 29-ம் தேதி மாநிலத்தின் வட பகுதியில் உள்ள காசர்கோடு முதல் தெற்கில் உள்ள திருவனந்தபுரம் வரையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பங்கேற்கலாம்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் வரும் 20-ம் தேதி பொதுக்கூட்டங்களும் 22-ம் தேதி பாதயாத்திரையும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x