Published : 30 Dec 2016 08:44 AM
Last Updated : 30 Dec 2016 08:44 AM
உ.பி. தலைநகர் லக்னோவில் சஞ்சீவ் துபே என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1987-ம் ஆண்டு பேட்ச், உ.பி. கேடர் ஐஏஎஸ் அதிகாரியான துபே, ஊர்க்காவல் படை துறையின் முதன்மை செயலா ளராக பதவி வகித்து வந்தார். இதற்கு முன் பல்வேறு முக்கி யப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
குடும்பத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீஸார் அவரது உடலை கைப்பற்றினர். அறையில் தற்கொலை குறிப்பும் கண்டெடுத்தனர். தொடர் உடல்நலக் குறைவால் துபே இம்முடிவை எடுத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
எலும்பு பாதிப்பால் கடந்த பல மாதங்களாக அவதிப்பட்டுவந்த அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவருக்கு நெருங் கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT