Published : 04 Jan 2023 11:56 AM
Last Updated : 04 Jan 2023 11:56 AM

போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆசாமி: ஏர் இந்தியா விமானத்தில் நேர்ந்த அவலம்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பெண் பயணி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் இனி விமானத்தில் பயணிக்க தடை விதிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பயணி, "நான் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் தூங்க ஏதுவாக விளக்கு அணைக்கப்பட்ட வேளையில் ஒரு போதை ஆசாமி என் இருக்கைக்கு அருகே வந்தார். நான் சுதாரிப்பதற்குள் அவர் அங்கே சிறுநீர் கழிக்கலானார். அதன்பின்னரும் கூட அவர் ஆடையை சரி செய்யாமல் ஆபாசமாக நின்றார். என் உதவிக் குரல் கேட்டு சக பயணிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். விமான சிப்பந்திகள் எனக்கு வேறு ஆடை அளித்தனர். அந்த இருக்கையின் மீது வேறு சீட் விரித்தனர். நான் எனக்கு ஏற்பட்ட துயரம் பற்றி புகார் அளித்தேன். ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த நபர் எதுவுமே நடக்காததுபோல் இறங்கிச் சென்றார். இந்த விஷயத்தில் விமான சிப்பந்திகள் மெத்தனமாக இருந்துவிட்டனர்" என்று டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் போதை ஆசாமி மீது இனி விமானத்தில் பறக்கமுடியாதபடி வாழ்நாள் தடை விதிப்பது பற்றி விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x