நெசவாளர்களுக்கு இலவசமாக தொலைபேசி சேவை

நெசவாளர்களுக்கு இலவசமாக தொலைபேசி சேவை
Updated on
1 min read

நெசவு தொழில் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மத்திய அரசு சார்பில் விரைவில் இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்த சேவை இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், அசாம் ஆகிய 7 மொழி களில் வழங்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசியில் நெசவாளர்கள் விளக்கம் கேட்கலாம். புதிய சேவை ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரும்.

நாடு முழுவதும் 28 இடங்களில் நெசவாளர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் சேவைகளை நெசவாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in