Published : 31 Dec 2016 10:37 AM
Last Updated : 31 Dec 2016 10:37 AM
அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு மற்றும் 5 எம்எல்ஏக் கள் அருணாச்சல் மக்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட் டதை அடுத்து, மாநிலத்தின் புதிய முதல்வராக தகம் பாரியோ பொறுப்பேற்க உள்ளார்.
காங்கிரஸ் சார்பில் அருணாச் சலப் பிரதேச முதல்வராக பொறுப் பேற்றிருந்த பேமா காண்டு, கடந்த செப்டம்பர் மாதம், 42 எம்எல்ஏக் களுடன் அக்கட்சியில் இருந்து விலகி, அருணாச்சல் மக்கள் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து முதல்வர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.
பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக முன்னணி யில் அங்கம் வகிக்கும் அருணாச்சல் மக்கள் கட்சியில் இணைந்ததன் மூலம், பேமா காண்டு தலைமை யிலான அரசு, பாஜகவுக்கு இணக்கமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் 43 எம்எல்ஏக்களுடன் அருணாச்சல் மக்கள் கட்சி பெரும்பான்மை பலத் துடன் உள்ளது. பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிர ஸுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த சூழலில், சொந்த கட்சியை வளர்ப்பதற்கு பதிலாக பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி, முதல்வர் பேமா காண்டு, துணை முதல்வர் சவுணா மேயின் மற்றும் 5 எம்எல்ஏக்களை அடிப்படை உறுப்பினர் அந்தஸ்த்தில் இருந்து அருணாச்சல் மக்கள் கட்சி தற்காலிகமாக நீக்கியது.
இதைத்தொடர்ந்து பாலின் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சரு மான தகம் பாரியோவை புதிய முதல்வராக்க கட்சியில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அருணாச்சல் மக்கள் கட்சியின் தலைவர் காஃபா பெங்கியா தெரிவித்தார்.
இதற்கிடையே சட்டப்பேரவை யில் 49 எம்எல்ஏக்களின் ஆதரவு முதல்வர் பேமா காண்டுவுக்கு இருப் பதாகவும், முதல்வர் பதவியை அவர் தொடர்ந்து வகிப்பதில் சிக்கல் ஏதுமில்லை என்றும் மாநில அரசு செய்தித்தொடர்பாளர் பமாங் ஃபெலிக்ஸ் கூறியுள்ளார்.
‘மொத்தமுள்ள 60 எம்எல்ஏக் களில், 49 பேரின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அருணாச்சல் மக்கள் கட்சியின் 43 எம்எல்ஏக் களில் 35 பேர் பேமா காண்டு தலைமையிலான அரசை ஆதரிக் கின்றனர். பாஜகவின் 12 உறுப் பினர்களின் ஆதரவும் உள்ளது. ஒரு சுயேட்சை உறுப்பினரும், மற்றொரு பாஜக ஆதரவு உறுப்பினரும் எங்கள் பக்கம் உள்ளனர்’ என்று ஃபெலிக்ஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT