Published : 15 Jul 2014 09:32 AM
Last Updated : 15 Jul 2014 09:32 AM
கச்சத்தீவு தொடர்பாக வழக்கில் தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு 4 வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு போட்டுள்ள ஒப்பந்தம் சட்ட விரோத மானது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது. இதனால், தமிழகத்தில் ராமநாத புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் களின் மீன்பிடி உரிமை, ஓய்வெ டுக்கும் உரிமை, வலைகளை உலர்த்தும் உரிமை, அந்தோணியார் ஆலயத்தில் வழிபடும் உரிமை ஆகியவை பறிபோயுள்ளன. எனவே, மத்திய அரசின் சட்ட விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக மீனவர்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் தத்து, அருண் மிஸ்ரா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க கருணாநிதி தரப்பில் அவகாசம் கேட்டதையடுத்து 4 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT