Published : 15 Jul 2014 11:05 AM
Last Updated : 15 Jul 2014 11:05 AM
காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தியே காரணம் என்று மத்தியப் பிரதேச மாநில மூத்த தலைவர் குப்ரான் ஆசம் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில துணைத் தலைவரும் மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான குப்ரான் இதுகுறித்து கூறும்போது, “இளைஞர் காங்கிரஸை ஒரு பரிசோதனைக் கூடமாக ராகுல் எண்ணி விட்டார். அதில் பல பரிசோதனைகள் செய்து நாசம் செய்துவிட்டார். இதுபற்றி நான் 2005-ம் ஆண்டு முதல் கட்சித் தலைவர் சோனியாவுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன். ராகுலுக்கு 10 ஆண்டுகள் வாய்ப்பு அளித்தும் அவர் அதை சரியாக செய்து வெற்றி பெறவில்லை எனில் ஒரு பயனும் இல்லை.
இதன் பிறகும் ராகுலுக்கு முக்கியப் பொறுப்புகள் அளிப்பதில் அர்த்தம் இல்லை. எங்கள் தலைவர்களில் ஒருவர் ராகுலை ‘பப்பு (செல்லம்)’ எனவும், மேலும் சிலர் ‘முன்னா (குழந்தை)’ எனவும் கிண்டல் செய்வதை கேட்டு அவமானத்தில் சலிப்படைந்து விட்டோம்.
எந்தவொரு பெற்றோரும் தமது குழந்தைகளை டாக்டர் அல்லது இன்ஜினியராக்க விரும்புவது சகஜமே. இதில் அந்தக் குழந்தை கவனம் எடுத்து படிக்கவில்லை எனில் பெற்றோர் என்ன செய்ய முடியும்?
மக்களவைத் தேர்தலின்போது நரேந்திர மோடி சொன்னபடி, காங்கிரஸை அவர் நசுக்கி விட்டார்” என்றார்.
முஸ்லிம்களின் முக்கிய தலைவராக குப்ரான் கருதப்படு கிறார். இவரைப் போல காங்கிரஸ் தலைவர்கள் பலரின் விமர்சனத் துக்கு ராகுல் ஆளாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT