Published : 01 Dec 2016 10:56 AM
Last Updated : 01 Dec 2016 10:56 AM
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை முகாம்கள் மீது அடுத்தடுத்து நடத் தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்த மாநில ஆளுநர் என்.என்.வோரா, அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்யு மாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜம்மு பிராந்தியத்தில் பாகிஸ் தான் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய இருவேறு தாக்குதல்கள் மாநிலத்தை உலுக் கின. ஜம்மு அருகே நக்ரோட்டா என்ற இடத்தில் ராணுவ முகாம் மீதான தாக்குதலில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். சம்பா மாவட்டம், ராம்கார் பகுதியில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட மோதலில் பிஎஸ்எப் வீரர்கள் பலர் காயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து மாநில ஆளுநர் என்.என்.வோராவிடம் தலைமைச் செயலாளர் நேற்று விளக்கினார். இதையடுத்து மாநிலத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்ய சிவில் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தர விடுமாறு தலைமைச் செயலாளரை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
ராணுவத்தின் வடக்கு படைப் பிரிவு கமாண்டர் டி.எஸ்.ஹூடா, மாநில காவல்துறை இயக்குநர் கே.கே.ராஜேந்திரா, பிஎஸ்எப் ஐஜி டி.கே. உபாத்யாய உட்பட பல்வேறு படைப் பிரிவுகளின் உயரதிகாரி களுடன் ஆளுநர் பேசினார்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத் தினருக்கு தனது அனுதாபங்களை தெரிவிக்குமாறு கூறிய அவர், காய மடைந்த வீரர்கள் விரைவில் குண மடைய நம்பிக்கை தெரிவித்தார்.
நக்ரோட்டா ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான நக்ரோட்டா ராணுவ முகாமுக்கு ராணுவத் தளபதி தல்பீர் சிங் நேற்று சென்றார். தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து அவரிடம் அங்குள்ள அதிகாரிகள் விளக்கிய தாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT