Published : 01 Dec 2016 05:25 PM
Last Updated : 01 Dec 2016 05:25 PM
ஹேக்கர்களின் அத்துமீறலில் இருந்து மீட்கப்பட்ட தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "என்னை வெறுப்போரையும் நேசிக்கிறேன்" என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
முன்னணி சமூக வலைதளமாக ட்விட்டரில் @OfficeOfRG என்ற கணக்கை ராகுல் காந்தி பயன்படுத்தி வருகிறார். அவரது ட்விட்டர் கணக்கு நேற்று இரவு 8.45 மணிக்கு ஹேக்கர்களால் அத்துமீறபட்டது.
ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் அத்துமீறி நுழைந்த ஹேக்கர்கள், அநாகரிக வார்த்தைகளுடன் பதிவுகளை இட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஹேக்கர்களிடன் அத்துமீறலில் இருந்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டு, அந்த மோசமான பதிவுகள் அனைத்தும் உடனடியாக அழிக்கப்பட்டன.
இந்த நிலையில், மீட்கப்பட்ட தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை முதல் பதிவிட்ட ராகுல் காந்தி, "என்னை வெறுப்போர் ஒவ்வொருவரையும் நேசிக்கிறேன். நீங்கள் அனைவருமே இனிமையானவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் அந்தப் பதிவு ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்களால் விரும்பப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் @INCIndia என்ற ட்விட்டர் கணக்கும் மீட்கப்பட்டு வழக்கமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT