Published : 02 Dec 2022 08:22 AM
Last Updated : 02 Dec 2022 08:22 AM

திருப்பதி விஐபி தரிசனத்தில் மாற்றம்: சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை

கோப்புப்படம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனம் நடைமுறையில் இருந்தது. இதனால் முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பின் தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் மறுநாள் காலை 5 - 8 மணி வரை சுவாமியை தரிசிக்க இயலாமல் இருந்தது.

இந்நிலையில், விஐபி பிரேக் தரிசனம் நேற்று முதல் சோதனை அடிப்படையில் காலை 8 மணிக்கு தொடங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை 5 - 8 மணி வரை 15 ஆயிரம் சாமானிய பக்தர்கள் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசித்துள்ளனர். விடிந்ததும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்ப புதிய நடைமுறை வசதியாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x