Published : 20 Dec 2016 09:23 AM
Last Updated : 20 Dec 2016 09:23 AM

வங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன என்னுடைய 15 லட்சம் ரூபாய் எங்கே?- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ஆவேசமாகப் பேசினார். அவர் பேசியதாவது:

இந்த நாட்டுக்காக நீங்கள் நிறைய தந்திருக்கிறீர்கள். அதற்கு உங்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். பிரதமர் மோடியுடனும் பாஜக.வுடனும் எங்களுக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருக் கின்றன. அதற்காக ‘ஒழிக’ என்று கூறக்கூடாது. அப்படி செய்வது ஆர்எஸ்எஸ் வேலை. பண மதிப்பு நீக்கம் என்பது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான போர் அல்ல. அது விவசாயிகள், ஒடுக் கப்பட்டவர்களுக்கு எதிரான போர். ஏழைகளின் பணத்தை மட்டும் மோடி காலியாக்கவில்லை; அவர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிவிட்டார்.

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று மோடியிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர் பதில் சொல்ல வில்லை. இதுதான் இந்தியாவின் உண்மை. கடந்த சில மாதங்களில், 60 சதவீத இந்தியாவின் வளத்தை ஒரு சதவீத மக்களிடம் (பணக் காரர்கள்) கொடுத்துவிட்டார். இந்த 60 சதவீத வளம் எல்லாம் 50 குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளன. நான் உங்களைக் கேட்கிறேன், கறுப்புப் பணம் இந்திய மக்களிடம் உள்ளதா அல்லது அந்த 50 குடும்பங்களிடம் உள்ளதா? எல்லாப் பணமும் கறுப்புப் பணம் அல்ல; எல்லா கறுப்புப் பணமும் பணம் அல்ல.

விவசாயி பணம் கொடுத்து விதைகள் வாங்கும் போது, அது கறுப்புப் பணம் அல்ல. தொழிலாளிக்கு தினக்கூலி பணமாக வழங்கும் போது அது கறுப்புப் பணம் அல்ல. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதை பணமாக வைத்திருக்கவில்லை. வெளிநாட்டு வங்கிகளிலோ அல்லது நிலமாகவோ, சொத்தா கவோ, தங்கமாகவோ உள்ளது.

வெறும் 6 சதவீத அளவுக்கு மட்டுமே கறுப்புப் பணம், பணமாக உள்ளது. இந்த புள்ளிவிவரம் மோடி அரசு வெளியிட்டதுதான்.

எனவே, 94 சதவீத கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளிலும், நிலமாகவும் தங்கமாகவும் இருப்பது மோடிக்கு தெரியும். அப்படி இருக்கும் போது வெறும் 6 சதவீத கறுப்புப் பணத்தை ஒழிக்க மோடி நினைப்பது ஏன்?

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியல் மோடியிடம் உள்ளது. யார் ஊழல்வாதிகள் என்பது அவருக்குத் தெரியும். அந்தப் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுங்கள் என்றால், அவர் எதுவும் செய்யவில்லை. விஜய் மல்லையா லண்டனில் இருக்கிறார். லலித் மோடி லண்டனில் இருக்கிறார். கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார். அது என்ன ஆயிற்று. என்னுடைய ரூ.15 லட்சம் எங்கே?

மோடியின் பிரச்சாரத்துக்கு விவசாயிகளும், தொழிலாளி களுமா செலவு செய்கிறார்கள்? இல்லை, அந்த 50 குடும்பத்தினர் தான் செய்கின்றனர். அதனால், அந்த 50 பேருக்கு எதிராக மோடி எதையும் செய்ய மாட்டார். ஏற்கெனவே, அந்த 50 தொழிலதி பர்கள் வைத்திருந்த ரூ.1,10,000 கோடி கடன்களை மோடி தள்ளுபடி செய்துவிட்டார். அந்தத் தொழிலதிபர்கள் வங்கிகளில் 8 லட்சம் கோடிக்கு கடன் வாங்கி உள்ளனர். நீங்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணம் உங்களிடம் இருப்பதை மோடி விரும்ப வில்லை. அந்தப் பணம் வங்கியி லேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

நான் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால் பரவாயில்லை. நம்பாதீர்கள். வரும் மாதங்களில் உங்களுக்கே தெரியும். உங்கள் பணம் வங்கிகளிலேயே இருந் தால், அந்த 50 குடும்பங்கள் வாங்கிய 8 லட்சம் கோடி பணத்தால் ஏற்பட்டுள்ள இழப்பை வங்கிகளால் சமாளிக்க முடியும்.

ரொக்கமில்லா பரிவர்த்தனை என்றால் என்ன என்று நான் சொல்கிறேன். நீங்கள் 100 ரூபாயை கடையில் கொடுத்து பொருள் வாங்குகிறீர்கள். எளிமையாக முடிந்துவிடுகிறது.

ரொக்கமில்லா பரிவர்த்தனை யில், வேறு வழிகளில் நீங்கள் பணம் செலுத்தினால், அதில் 5 சதவீதம் அந்த 50 ஊழல் குடும்பங்கள் வைத்துள்ள வங்கி கணக்கில் நேரடியாக சென்று விடும். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தீர்களே. அது என்னவாயிற்று. இளைஞர் களின் வாழ்க்கையை நீங்கள் அழித்து விட்டீர்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

‘மோடி ஒழிக’ கோஷமிட கூடாது

ஜான்பூரில் நேற்று நடந்த கூட்டத்தில் ராகுல் பேசும்போது, தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ‘மோடி முர்தாபாத்’ (மோடி ஒழிக) என்று கோஷமிட்டனர். அதை கேட்ட ராகுல், ஒழிக கோஷமிட கூடாது என்று தொண்டர்களைக் கண்டித்தார்.

அவர் கூறும்போது, ‘‘இங்கு காங்கிரஸ் கூட்டம் நடைபெறுகிறது. மோடி ஒழிக என்ற கோஷத்துக்கு இங்கு இடமில்லை. மோடி இந்திய நாட்டின் பிரதமர். அவருக்கு எதிரான நமது போராட்டம் அரசியல்ரீதியானது. அரசியல் ரீதியாகவே அவரை நாம் தோல்வி அடைய செய்வோம். ‘முர்தாபாத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்து வது ஆர்எஸ்எஸ் வேலை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x