Last Updated : 19 Dec, 2016 07:28 PM

 

Published : 19 Dec 2016 07:28 PM
Last Updated : 19 Dec 2016 07:28 PM

அரசியல் கட்சிகள் 1 ரூபாய் நன்கொடை பெற்றாலும் வெளியிட வேண்டும்: நிதிஷ் குமார்

அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் நன்கொடை ரூ.1ஆக இருந்தாலும் அதனை தெரியப்படுத்த வேண்டும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ரூ.2,000த்திற்கும் கூடுதலான நன்கொடைகளை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று சட்டத்திருத்தங்களுக்கு தேர்தல் ஆணையம் முன்மொழிவு மேற்கொண்டுள்ள நிலையில் நிதிஷ் குமார் ரூ.1 நன்கொடை பெற்றாலும் பொதுமக்களுக்கு அது தெரிய வேண்டுமென்று கூறியுள்ளார்.

“ஏன் ரூ.2000 மற்றும் அதற்கு மேல்? 1 ரூபாயாக இருந்தாலும் 10 ரூபாயாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றுதான் சட்டத்திருத்தம் வரவேண்டும். ஆனால் பாஜக தலைமை தேஜகூ அரசு இந்த அளவுக்கு சட்டத்திருத்தம் கொண்டு வருமா என்பது சந்தேகமே” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x