Published : 16 Nov 2016 08:02 AM
Last Updated : 16 Nov 2016 08:02 AM

நதிகளை இணைக்க சிறப்பு குழு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் பாயும் நதி களை இணைப்பது குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 2012-ம் ஆண்டில் உத்தரவிட்டது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் உயர்நிலைக் குழு அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நதிகள் இணைப்பு தொடர்பாக ஆராய உயர்நிலைக் குழுவை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த குழுவில் நீர்வளத் துறை, சுற்றுச்சூழல், வனத்துறையைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள். அவர்கள் நதிகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். அதன்படி மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x