Published : 15 Nov 2022 08:40 AM
Last Updated : 15 Nov 2022 08:40 AM

காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு - நெடுஞ்சாலைகள், கிராமங்கள் துண்டிப்பு

கோப்புப்படம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கில் சுமார் 6 அங்குல பனிப் பொழிவும் குரேஸ், மச்சில் ஆகிய இடங்களில் 12 அங்குல பனிப் பொழிவும் பதிவாகியுள்ளது.

சோனாமார்க் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடும் பனிப் பொழிவு காரணமாக ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பூஞ்ச் – ரஜவுரி இடையிலான மாற்றுப் பாதையான முகால் சாலை, பண்டிப்போரா – குரேஸ் சாலை ஆகியவையும் பனிப் பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. உயரமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக அவை மாவட்டத் தலைநகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x