Published : 09 Nov 2022 04:59 AM
Last Updated : 09 Nov 2022 04:59 AM

நக்சல் தீவிரவாதம் 55% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகளால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2013-ல் நக்சல் தீவிரவாதிகள் 1,136 தாக்குதல்களை நடத்தினர். கடந்த 2021-22-ம் ஆண்டில் அவர்களின் தாக்குதல் 509 ஆக குறைந்துள்ளது. இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 55% அளவுக்கு நக்சல் தீவிரவாதம் குறைந்திருக்கிறது.

இதேபோல கடந்த 2013-ல்நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதலில் 397 பேர் உயிரிழந்தனர். கடந்த 2021-22-ல் 147 பேர் உயிரிழந்தனர். இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் உயிரிழப்பு 63% குறைந்திருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x