Last Updated : 27 Nov, 2016 11:33 AM

 

Published : 27 Nov 2016 11:33 AM
Last Updated : 27 Nov 2016 11:33 AM

பஞ்சாபில் சிறைக்குள் புகுந்து 5 கைதிகளுடன் தப்பிய ஆயுதமேந்திய கும்பல்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறையில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் காலிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவர் ஹர்மிந்தர் மிண்ட்டூ உட்பட 5 கைதிகளுடன் தப்பிச் சென்றனர்.

உயர் பாதுகாப்பு சிறையான நப்ஹா சிறையில் போலீஸ் உடை அணிந்து வந்த கும்பல் ஒன்று சிறைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு காலிஸ்தான் தலைவர் மிண்ட்டூ உட்பட 5 பேருடன் தப்பிச்சென்றனர்.

தப்பிச் சென்ற கைதிகளில் விக்கி கோந்தர் என்ற ரவுடி, குர்பிரீத் செகான், நிட்டா தியோல், விக்ரம்ஜீத், மற்றும் காலிஸ்தான் தீவிரவாதி மிண்ட்டூ ஆகியோர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

மிண்ட்டூ 2014-ம் ஆண்டு டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் பஞ்சாப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பஞ்சாபில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x