குஜராத்தில் அதிக இடங்களில் போட்டி: அசாதுதீன் ஓவைஸி திட்டவட்டம்

குஜராத்தில் அதிக இடங்களில் போட்டி: அசாதுதீன் ஓவைஸி திட்டவட்டம்
Updated on
1 min read

ஹைதராபாத்: குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவோம் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைஸி கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தலில் தமது மஜ்லிஸ் கட்சி போட்டியிடுவது குறித்து ஹைதராபாத்தில் ஓவைஸி அளித்த பேட்டியில் கூறியதாவது:

குஜராத்தில் முதன் முதலில் தேர்தல் பிரச்சாரத்தை நான் தான் தொடங்கினேன். அதன்பிறகு தான் மற்ற கட்சிகள் பிரச்சாரத்தில் இறங்கின. ஏற்கெனவே எங்கள் கட்சியினர் குஜராத்தில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நாங்கள் எங்களுக்கு பலமான இடங்களில் தான் போட்டியிட உள்ளோம். நானும் பிரச்சாரம் செய்வேன். பாஜகவின் ஆட்சியில் குஜராத்தில் எங்கும் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. பல பிரச்சினைகளில் குஜராத் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். விரைவில் அவர்களுக்கு விடிவு காலம் வரும். இவ்வாறு அசாதுதீன் ஓவைஸி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in