Published : 21 Nov 2016 10:26 AM
Last Updated : 21 Nov 2016 10:26 AM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தடம் புரண்ட எஸ்3 பெட்டியில் சிக்கியிருந்த 6 மற்றும் 7 வயதுடைய 2 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு அருகே ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. அது அந்த சிறுவர்களின் தாயாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஏ.கே.சிங் கூறும்போது, “தடம் புரண்ட ஒரு பெட்டிக்கு நடுவே 2 சிறுமிகள் சிக்கி உள்ளனர். அவர்களை விரைவில் உயிருடன் மீட்போம். இந்தப் பகுதியில் ஏராளமானோர் குழுமி உள்ளனர். இது மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT