Last Updated : 21 Nov, 2016 10:26 AM

 

Published : 21 Nov 2016 10:26 AM
Last Updated : 21 Nov 2016 10:26 AM

ரயில் விபத்தில் 2 சிறுவர்கள் உயிருடன் மீட்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தடம் புரண்ட எஸ்3 பெட்டியில் சிக்கியிருந்த 6 மற்றும் 7 வயதுடைய 2 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு அருகே ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. அது அந்த சிறுவர்களின் தாயாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஏ.கே.சிங் கூறும்போது, “தடம் புரண்ட ஒரு பெட்டிக்கு நடுவே 2 சிறுமிகள் சிக்கி உள்ளனர். அவர்களை விரைவில் உயிருடன் மீட்போம். இந்தப் பகுதியில் ஏராளமானோர் குழுமி உள்ளனர். இது மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x