Last Updated : 13 Nov, 2016 11:35 AM

 

Published : 13 Nov 2016 11:35 AM
Last Updated : 13 Nov 2016 11:35 AM

கங்கையில் மிதந்த ரூ.1,000 நோட்டுகள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் 1,000 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறும்போது, “கங்கை நதியில் நயாகத் பகுதியில் 1,000 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததை அப்பகுதியில் சிலர் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், கிழிந்த நிலையில் இருந்த 19 நோட்டுகளை நதியிலிருந்து மீட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x