Published : 24 Nov 2016 06:09 PM
Last Updated : 24 Nov 2016 06:09 PM
உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த சிறுமியை சல்மான், சுமனி என்ற இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து மருத்துவமனைக்கு வெளியே விட்டுச் சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையிலே இரு இளைஞர்களும் போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT