நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அலுவல் நாட்கள் குறையாது: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அலுவல் நாட்கள் குறையாது: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்
Updated on
1 min read

பட்ஜெட் கூட்டத்தொடரின் அலுவல் நாள்கள் குறைக்கப் படாது என்று நாடாளுமன்ற விவ காரத்துறை அமைச்சர் வெங் கய்ய நாயுடு தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து ஹைதராபாதில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: நாடாளு மன்றத்துக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்று நாள்களுக்குள் எம்.பி.க்கள் தொகுதிக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்ப முடியாது என்ப தால் விடுமுறை நாள்கள் 4 ஆக அதிகரிக்கப்பட்டது.

தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் அலு வல் நாள்கள் குறைக்கப்படாது. நீதித்துறை நியமன ஆணைய மசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதுகுறித்து மக்களவை சபாநாயகர் பரி சீலித்து முடிவெடுப்பார். இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்ப தாக காங்கிரஸ் குற்றம் சாட்டுவது தவறானது.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு யாருக்கும் அளிக்கப்படவில்லை.

மக்களவைத் தலைவர் விவகாரத்தில் 1977 முதல் புதிய நடை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகக் காங்கிரஸ் கூறுகிறது. அப்படியென்றால் 1977-க்கு பிறகு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது மக்களவையில் 31 உறுப்பினர் களுடன் மிகப் பெரிய கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்துக்கு ஏன் எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப்படவில்லை என்றார்.

கடந்த 7-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in