

புதுடெல்லி: ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய அமைச்சரவைக்கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:
அமைச்சரவைக் கூட்டத்தில் ரெயில்வேதுறைக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
வரும் 22ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.