உ.பி.யில் டி-90 பீரங்கி பேரல் வெடித்து ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

உ.பி.யில் டி-90 பீரங்கி பேரல் வெடித்து ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே பாபினா கன்டோன்மென்ட் பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது டி-90 பீரங்கி ஒன்றின் பேரல் வெடித்ததில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக பாபினாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எனினும் 2 வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in