டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
Updated on
1 min read

பெங்களூரு: காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் யங் இந்தியா அறக்கட்டளைக்கு கைமாற்றப்பட்டதில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை சோனியா, ராகுல்காந்தி உள்ளிட் டோரிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று அதிகாலை தனது சகோதரரும் காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே.சுரேஷூடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அமலாக்கத் துறை அதிகாரிகள் இருவரிடமும் தனித்தனியாக சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது வங்கி கணக்கு களில் இருந்து, யங் இந்தியா நிறுவனத்துக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in