அனைவருக்கும் ஏஐ பலன்: ஏஐ பிரகடனத்தில் சீனா உட்பட 88 நாடுகள் கையெழுத்து

அனைவருக்கும் ஏஐ பலன்: ஏஐ பிரகடனத்தில் சீனா உட்பட 88 நாடுகள் கையெழுத்து
Updated on
1 min read

புதுடெல்லி: அனை​வருக்​கும் ஏஐ பலன்​கள் கிடைக்க வேண்​டும் என்​பதை வலி​யுறுத்​தும் புதுடெல்லி ஏஐ பிரகடனத்​தில், அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா உட்பட 88 நாடு​கள் கையெழுத்​திட்​டுள்​ளன.

டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் ‘இந்​தி​யா-ஏஐ உச்சி மாநாடு 2026’ கடந்த 16-ம் தேதி தொடங்​கியது. கடந்த 6நாட்​களாக நடை​பெற்ற இந்த மாநாடு நேற்று நிறைவடைந்​தது. இதில் 5 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பார்​வை​யாளர்​கள் பங்​கேற்​றனர்.

உலகளா​விய கொள்கை வகுப்​பாளர்​கள், தொழில்​துறை தலை​வர்​கள் மற்​றும் தொழில்​நுட்ப வல்​லுநர்​களை ஒன்​றிணைத்த இந்த மாநாடு, சர்​வ​தேச ஏஐ நிர்​வாகம் மற்​றும் உள்​கட்​டமைப்பு மேம்​பாட்டை வடிவ​மைப்​ப​தில் இந்​தி​யா​வின் முக்​கியப் பங்கை உறு​திப்​படுத்​தி​யுள்​ளது.

உலகம் முழு​வ​தி​லுமிருந்து பல முன்​னணி நிறு​வனங்​கள் இதில் பங்​கேற்​றன. இந்த மாநாட்​டின் இறுதி நாளில், ‘புது டெல்லி ஏஐ பிரகடனம்’ வெளி​யிடப்​பட்​டது. இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க பிரகடனத்தில் அமெரிக்​கா, சீனா, ரஷ்​யா, பிரிட்​டன், பிரான்ஸ் மற்​றும் ஐரோப்​பிய ஒன்​றி​யம் உட்பட 88 நாடு​கள் மற்​றும் சர்​வ​தேச அமைப்​பு​கள் கையெழுத்​திட்​டுள்​ளன.

இதுகுறித்து மத்​திய அரசு வெளி​யிட்ட அறிக்​கை​யில், “அனை​வரது நலன் மற்​றும் அனை​வரது மகிழ்ச்சி அவசி​யம் என்ற உயர்ந்த தத்​து​வத்தை அடிப்​படை​யாகக் கொண்டு இந்த பிரகடனம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, செயற்கை நுண்​ணறி​வின் பயன்​கள் அனை​வருக்​கும் சமமாகப் பகிரப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும்.

இதற்​காக தேசிய இறை​யாண்​மைக்கு முக்​கி​யத்​து​வம் அளித்​தல், ஏஐ தொழில்​நுட்​பத்தை அனை​வரும் எளி​தில் அணுகக்​கூடிய​தாக மாற்​று​தல் மற்​றும் சர்​வ​தேச ஒத்​துழைப்பை வலுப்​படுத்​துதல் ஆகிய​வற்​றுக்கு புது டெல்லி பிரகடனம் அழைப்பு விடுத்​துள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஏஐ வளங்​களை ஜனநாயகப்​படுத்​துதல், பொருளா​தார வளர்ச்சி மற்​றும் சமூக நலம், பாது​காப்​பான மற்​றும் நம்​பக​மான ஏஐ, அறி​வியலில் ஏஐ, சமூக அதி​காரமளித்​தல் மற்​றும் மனிதவள மேம்​பாடு உட்பட 7 துறை​களில் கவனம் செலுத்த வேண்​டும் என இந்த பிரகடனம் வலி​யுறுத்​துகிறது.

இதுகுறித்து மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறும்​போது, “இந்த மாநாடு மிகப்​பெரிய வெற்றி பெற்​றுள்​ளது. இந்​தி​யா​வின் உள்​கட்​டமைப்​புத் துறை​யில் ரூ.22 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக முதலீடு செய்​வது தொடர்​பான ஒப்​பந்​தங்கள்​ கையெழுத்​தாகி உள்​ளன” என்​றார்​.

அனைவருக்கும் ஏஐ பலன்: ஏஐ பிரகடனத்தில் சீனா உட்பட 88 நாடுகள் கையெழுத்து
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரி விவகாரத்தை ஆய்வு செய்கிறது இந்தியா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in