Last Updated : 15 Nov, 2016 07:25 AM

 

Published : 15 Nov 2016 07:25 AM
Last Updated : 15 Nov 2016 07:25 AM

வெளிநாடுகளில் குற்றம் புரிந்த இந்தியர்களுக்கு விரைவில் தண்டனை: சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கியது மத்திய அரசு

வெளிநாடுகளில் குற்றச்செயல் களில் ஈடுபட்டுவிட்டு தாய் நாட்டுக்கு ஓடி வரும் இந்தியர் கள் இனி தண்டனையில் இருந்து தப்ப முடியாது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க சிபிஐ-க்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

மொத்தம் 39 நாடுகளுடன் இந்தியா கைதிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள் ளது. எனினும் அதில் 21 நாடு களுக்கு இந்திய குற்றவாளிகளை நாடு கடத்த முடியாது.

இதனால் அந்த நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பி வரும் இந்தியர்கள், இங்கு சுதந்திரமாக உலவி வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பல்கேரியா, பிரான்ஸ், ஜெர்மனி, சவுதி அரேபியா, போலாந்து, போர்ச்சுகல், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்களை நாடு கடத்த முடியாது. ஏனெனில் அந்நாட்டுடனான ஒப்பந்தம் குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் நிதி மோசடி, திருட்டு, நம்பிக்கை துரோகம், கொலை உள்ளிட்ட குற்றச்செயல் களில் ஈடுபட்டவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்திய சட்டத்தின்படி தண்டனை அளிக்கும் வகையில் சிபிஐ-க்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

இது குறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவுதல் (சிபிஐ) சட்டத்தின்படி வெளிநாட்டு அரசால் தேடப்படும் இந்திய குற்றவாளி களை விசாரித்து தண்டனை வழங்க சிபிஐ-க்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. இத்தகைய குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்குவதற்காக இன்டர்போலின் தேசிய மத்திய புலனாய்வு ஏஜென்சி (என்சிபி) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப் பட்டுள்ளது. கைது செய்யப்படும் குற்றவாளிகள் மீதான வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றங் களில் நடக்கும்’’ என தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x