Published : 18 Nov 2016 11:59 AM
Last Updated : 18 Nov 2016 11:59 AM

ரூபாய் நோட்டு வழக்குக்கு தடை கோரி மத்திய அரசு மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

ரூபாய் நோட்டு வழக்குக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித் துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது.

இந்த வழக்கை கடந்த 15-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. எனினும் மக்களின் சிரமத்தைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் ரூபாய் நோட்டு வழக்குக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஏ.ஆர். தேவே, கான்வில்கர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x