Published : 05 Nov 2016 12:55 PM
Last Updated : 05 Nov 2016 12:55 PM
கேரளாவில் பிறந்த குழந்தைக்கு 24 மணி நேரமாக தாய்ப்பால் ஊட்ட தாயை அனுமதிக்காத தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் ஆணையம், சிறார் நீதி சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபரின் மீது காவல் துறையில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
முன்னதாக, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்படி டாக்டர்கள் அந்தக் குழந்தையின் தாயிடம் கூறியுள்ளனர்.
ஆனால் குழந்தையின் தந்தையான அபூபக்கர் சித்திக் 5 முறை பிரார்த்தனையில் ஈடுபட்ட பிறகே குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டவேண்டும். அதுவரை குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டக் கூடாது என்று மருத்துவர்களிடம் பிடிவாதமாக சண்டையிட்டுள்ளார்.
இதனை அடுத்து குழந்தையின் ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு மருத்துவமனைக்கு பொறுப்பு இல்லை என்று தந்தையிடம் எழுதி வாங்கிவிட்டு குழந்தையை மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்தனர்
இந்த சம்பவம் பற்றி கேள்விபட்ட கோழிக்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி, மாவட்ட ஆட்சியர் என்று பலர் இதில் தலையிட்டு குழந்தைக்கு தாயிடம் தாய்ப்பால் ஊட்டச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT