அனைத்து தலைவர்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டும் - பிரதமருக்கு வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

அனைத்து தலைவர்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டும் - பிரதமருக்கு வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி, பல விஷயங்கள் குறித்து பேசியவை தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம், ‘‘சப்காசாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஷ் (அனைவருடன் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரது நம்பிக்கையுடன்) - பிரதமர் மோடி பேசுகிறார்(மே 2019- மே 2020) என்ற பெயரில் டெல்லியில் உள்ள ஆகாசவாணி பவனில் நேற்று வெளியிடப்பட்டது.

இதை முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டு பேசுகையில், ‘‘பிரதமர் மோடி பல சாதனைகளை படைத்தாலும், சிலருக்கு அவரது நடைமுறைகள் பற்றி தவறான கண்ணோட்டம் உள்ளது. எனவே, அனைத்து அரசியல் தலைவர்களையும், பிரதமர் மோடி அடிக்கடி சந்தித்துபேச வேண்டும். இது அவரது நடவடிக்கைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் தவறான புரிதல்கள், சிறிது காலத்தில் நீங்க உதவும்". இவ்வாறு வெங்கய்யா நாயுடு பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in