Published : 06 Nov 2016 06:53 PM
Last Updated : 06 Nov 2016 06:53 PM

பாஜக ஆட்சி அமைந்தால் உ.பி. பணக்கார மாநிலமாகும்: அமித்ஷா வாக்குறுதி

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் உத்தரப் பிரதேசம் பணக்கார மாநிலமாக மாறும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் ஜான்ஸி நகரில் இன்று நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துள்ளன. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பளியுங்கள். மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறுவதால் உத்தரப் பிரதேச மக்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கும். பாஜக ஆட்சி அமைந்தால் உத்தரப் பிரதேசம் பணக்கார மாநிலமாக மாறும்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x