Published : 16 Sep 2022 05:48 AM
Last Updated : 16 Sep 2022 05:48 AM

காஷ்மீரில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 25 பேர் காயம்

காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் டேரி ரால்யோட் பகுதியில் பயணிகள் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. படம்: பிடிஐ

ஜம்மு: காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இருந்து ரஜோரி பகுதிக்கு நேற்று பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ரஜோரி மாவட்டம் டேரி ரால்யோட் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்ஸில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ், ராணுவ வீரர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “ரஜோரி பகுதி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியை விரைவுபடுத்தி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x