Published : 19 Nov 2016 10:11 AM
Last Updated : 19 Nov 2016 10:11 AM
கடலுக்கு அடியில் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டிலேயே மேம்படுத்தப் பட்ட 4 வகையான சோனார் கருவிகள் இந்திய கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான அபய் உள்ளிட்ட கப்பல் களில் இந்த 4 வகையான சோனார் களும் பொருத்தப்படவுள்ளன. முன்னதாக டெல்லியில் நேற்று நடந்த விழாவில் சோனார் கருவி களை, இந்திய கடற்படையிடம் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் முறைப்படி ஒப்படைத் தார்.
கொச்சியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் இந்த சோனார்கள் தயாரிக்கப்பட்டன. இதன் மூலம், கடலுக்கு அடியில் கண்காணிப்புத் திறனை ஊக்குவிக்க முடியும். கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், சோனார் கருவிகள் உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப் பும். அதே போல் கடலுக்கு அடியில் எதிரிநாட்டின் நீர்மூழ்கி கப்பல்கள் அசைவது தெரிந்தாலும் சோனார் கருவிகள் கண்காணித்து, கடற்படையினருக்கு உஷார் படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT