ஆந்திராவில் திருமணமான இரவு மர்மமாக மணமகன் உயிரிழப்பு

ஆந்திராவில் திருமணமான இரவு மர்மமாக மணமகன் உயிரிழப்பு

Published on

திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனபள்ளியைச் சேர்ந்த துளசி பிரசாத் (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிரிஷா (23) ஆகிய இருவருக்கும் பெரியவர்கள் நிச்சயித்த வண்ணம் கடந்த திங்கட்கிழமை மதனபள்ளியில் திருமணம் நடைபெற்றது. பின்னர், பெண் வீட்டார் வீட்டில் முதல் இரவு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மணமகன் துளசி பிரசாத் முதல் இரவு அறைக்குள் இருந்தார். சிறிது நேரம் கழித்து மணப்பெண் அறைக்கு சென்று பார்த்தபோது, படுக்கையில் விழுந்து கிடந்தார் துளசி பிரசாத். அதிர்ச்சி அடைந்த சிரிஷா வெளியில் ஓடி வந்து தகவல் தெரிவித்தார்.

உடனடியாக துளசி பிரசாத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே துளசி பிரசாத் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மதனபள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in