Published : 24 Nov 2016 06:04 PM
Last Updated : 24 Nov 2016 06:04 PM
கர்நாடக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அவையில் இல்லாத அமைச்சர் பகிரங்கமாக உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோரினார்.
கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெல்காமில் உள்ளா சுவர்ணசவுதாவில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது சட்டப்பேரவை தலைவர் கோலிவாட், ''அவையில் கேள்வி நேரத்தின் போது சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும்'' என ஆணையிட்டார்.
இந்நிலையில் வியாழக்கிழமை சட்டப்பேரவை தொடங்கியதும் பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு உறுப்பினர் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அப்போது பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது பெரும்பாலான அமைச்சர்கள் அவையில் இல்லாததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து பேரவை தலைவர் கோலிவாட் அவையில் இல்லாத அமைச்சர்களை கடிந்து கொண்டார். சில நிமிடங்கள் கழித்து அவைக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.வி. தேஷ்பாண்டே, தான் அவையில் இல்லாததற்கு மன்னிப்பு கோரினார். இதே போல அவையில் இல்லாத மற்ற அமைச்சர்களுக்காகவும் மன்னிப்பு கோரினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சரின் இந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT