Published : 12 Sep 2022 09:35 AM
Last Updated : 12 Sep 2022 09:35 AM

விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி.

புதுடெல்லி: கடந்த1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற உலக மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 11-ம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் தொடர்புள்ள சிறப்பு தினமாகும். கடந்த1893-ம் ஆண்டு இதே நாளில்தான் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் தலைசிறந்த உரை ஆற்றினார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x